அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, சமீபத்தில் காலமான அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் மறைவுக்கு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எந்த வித செயலிலும் கட்சியினர் ஈடுபடாமல் இருக்க முன்னோடிகள் கவனிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version