மயிலாடுதுறையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பயிற்சி

மயிலாடுதுறையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது :-

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் நெக்ஸ்ட் ஸ்டெப் ஐயர் எஜுகேஷன் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் , சத்தியபாமா , இந்துஸ்தான் போன்ற பல்வேறு சிறந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் காணொளி மூலம் மாணவர்களுடன் உரையாடி ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மாணவர்கள் பேராசிரியர்களிடம் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து மாணவர்கள் உடல் நலனை கருத்தில் கொள்வது குறித்து உளவியல் ரீதியாகவும் , மருத்துவர் இறுதியாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர்களுடன் கலந்து கொண்ட பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறையில் பங்கேற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

Exit mobile version