கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடக்கம் – அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்

கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடக்கம் – அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தொடங்கிய இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா அனுமதி தொடர்பான காரணங்களால் சில மாதங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகை சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு தற்பொழுது மீண்டும் ஹெலிகாப்டர் சுற்றுலா இன்று தொடங்கப்பட்டுள்ளது

இன்று அதற்கான தொடக்க விழா நடைபெற்றது இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர்.
தா மோ. அன்பரசன்
ஹெலிகாப்டர் சவாரியை கொடி அசத்து தொடங்கி வைத்தனர்.

Exit mobile version