மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை, 2-வது நாளாக பெய்த மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை, இரண்டாவது நாளாக பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலெடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை பகுதியில் ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்திருந்தது நேற்று இரவு மீண்டும் நல்ல மழை பெய்திருந்தது. மயிலாடுதுறையில் மட்டும் 19.6 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்திருந்த நிலையில், இன்று பிற்பகல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக குருவை சாகுபடி உழவிற்க்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version