கன்னியாகுமரி போக்குவரத்து காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவலர்களைப் பாதுகாக்க நவீன உபகரணங்கள் மற்றும் குளிர்பானங்கள் ,வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சிக்னல்களில், காவலர்கள் நிற்பதற்கு தற்காலிக பந்தல்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து செய்து வரும் நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்துக் காவலர்களுக்கு சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள் மற்றும் வெயிலிலிருந்து பாதுகாத்து கொள்ள கையுறைகள் வழங்கப்பட்டன. இதனை போக்குவரத்து காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ் பி ஸ்டாலின் அவர்கள் கூறும்போது மாவட்டத்தில் விபத்துகள் கணிசமான அளவு குறைந்துள்ளது என்றும் பள்ளி கல்லூரிகளில் ரோடு சேஃப்டி கிளப் என்ற ஒன்றை உருவாக்கி வைத்துள்ளதாகவும் அதன் மூலம் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விபத்துகளை குறைக்கவும் இது உதவும் என்றும் தற்பொழுது பள்ளிகள் நாளை திறக்க உள்ள நிலையில் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிட்டது அதனால் போக்குவரத்து பாதிப்பு இனி இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்

Exit mobile version