கொரோனாவை விட ஆபத்து… – வந்தது எச்சரிக்கை

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சீனாவைச் சேர்ந்த யூங்கிங் ஜியான் என்ற இளம்பெண் மற்றும் அவரின் காதலர் சுன்யோங் லியு அபாயகரமான கிருமியைக் கடத்திய புகாரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Fusarium graminearum என்ற அபாயகரமான பூஞ்சை மூலம் கோதுமை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு Head blight என்னும் நோயைப் பரப்ப அவர் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சீனாவுடனான உறவை அமெரிக்கா துண்டிக்காவிட்டால் பேரழிவு வரக்கூடும் என்று “China is going to war என்ற புத்தகத்தின் ஆசிரியரும் சீனா நிபுணருமான கோர்டன் ஜி சாங் எச்சரித்திருக்கிறார். மேலும், இது அமெரிக்காவிற்கு எதிராக சீனா போர் செய்வதற்குச் சமம் எனத் தெரிவித்த அவர், இந்த பூஞ்சை COVID-19 ஐ விட மோசமானது எனவும், இதனால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், பூஞ்சை என்பது பல காலமாக அமெரிக்காவில் இருந்து வருகிறது எனவும், இதனால் ஏற்படும் அபாயம் குறைவாகவே இருக்கும் எனவும் அமெரிக்காவில் உள்ள விவசாயிகளும், நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version