விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம் கே.கே. ரோடு மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்யில், மாசி மாத மகா சிவராத்திரியைத் தொடர்ந்து நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்தத் திருவிழாவில், அம்மன் கபாலிகர் வேடத்தில் மயானத்திற்கு எழுந்தருளி, அங்குள்ள சாம்பல் மற்றும் மண்ணை எடுத்துச் சூறையாடும் சடங்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ருத்ரபூமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிகழ்வைக் காண பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபடுகின்றனர்.
புராணக் கதைகளின்படி, பிரம்மாவின் கபாலத்தைத் தன் கையில் ஏந்திய சிவபெருமானின் சாபத்தை நீக்கிய அங்காள பரமேஸ்வரி அம்மனை நினைவுகூரும் விதமாக இந்த மயானக் கொள்ளை விழா நடைபெறுகிறது.
மேலும், திருவிழா நாளில் கருப்பு காளி, ரத்த காளி, பச்சை காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பக்தர்கள் காய்கறிகள் மற்றும் பலகாரங்களை அம்மனுக்கு படைத்து, மயானக் கொள்ளை நிகழ்வில் பக்தி உணர்வுடன் பங்கேற்பது இந்தத் திருவிழாவின் சிறப்பாகும்.இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேத்தி கடன் செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.. அப்போது பொது மக்களுக்கு அதிமுக நகர மகளிர் அணி செயலாளர் வடக்கு பத்மபிரியா ஏற்பாட்டில் மோர் ஜூஸ், பொங்கல், கொழுக்கட்டை சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது உடன் நகர செயலாளர் பசுபதி வண்டிமேடு ராமதாஸ் நகர மாணவரணி என் ஜி சக்திவேல் மற்றும் அண்ணாமலை உடன் இருந்தனர்

Exit mobile version