புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் ஈத்தன்காடு பகுதியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 ஆவது பிறந்தநாள் இந்த மாதம் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் கே டி பச்சை மால் தலைமையில் நடைபெற்ற கோல போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பலவித கோலங்களை இட்டு அசத்தினர் கோலப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பெண்களுக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் என் தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார் விடியா திமுக ஆட்சி விட்டு கரண்ட் பில்லே சாட்சி என்றும் அவலங்களை விளக்கும் விதமாக துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன மேலும் கோல போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

Exit mobile version