500 ரூபாய் நோட்டு இருக்கா? – அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

இந்தியாவில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் போலியாக உருவாக்கப்பட்டு பரவியுள்ளதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பை SEBI, CBI, DRDO மற்றும் ANI போன்ற முக்கிய அமைப்புகளும் உறுதிப்படுத்தியதாக செய்தி கூறுகிறது. இது பொதுமக்கள் அனைவரும் உடனடியாக கவனிக்க வேண்டிய முக்கிய தகவலாகும்.

போலி நோட்டை எப்படி அடையாளம் காணலாம்?

நிஜம் போல தோன்றும் போலி!
போலி நோட்டுகள், அசல் நோட்டின் மேல் உள்ள மையின் நிழல், எழுத்துகள், வண்ணம் போன்ற அம்சங்களை மிக நுட்பமாகக் காப்பியடித்து தயாரிக்கப்படுகின்றன.

முக்கிய சிக்கல் – எழுத்துப் பிழை:
500 ரூபாய் நோட்டில் “Reserve Bank of India” என இருப்பதை போலியாக, “Reserve Bank of IndIa” என “e” பதிலாக “a” எழுதப்பட்டுள்ளது. இதுவே முக்கிய அடையாளம்!

வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை:

அனைத்து வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் போலி நோட்டுகளின் புழக்கத்தை தடுக்கும் வகையில் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இந்த போலி நோட்டுகள் புழக்கத்தில் விடபட்டதற்கு பின்னால் தீவிரவாத அமைப்புகளின் தொடர்பும் இருக்கலாம் என அரசுத் தகவல்கள் கூறுகின்றன.

மக்களுக்கான முக்கிய அறிவுரை:

“போலி நோட்டுகள் பாரத நாட்டின் நிதி பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அபாயம். ஒரு சிறிய விழிப்புணர்வு, பெரிய சிக்கலைத் தவிர்க்க உதவும்!”

Exit mobile version