தைப்பூசத்தை முன்னிட்டு செம்பனார்கோயில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு சண்முக அர்ச்சனை நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளி தெய்வ சேனை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் சாத்தப்பட்டு முருகனுக்கு சண்முகர்ச்சனை நடைபெற்றது. தொடர்பு மகா தீபாரதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
