தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது இக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோன்று இந்த ஆண்டு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. மயான சூறை நிகழ்ச்சியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு புகழ் பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது இதில் காளி வேடம் அணிந்த பக்தர் மேல தாளங்கள் முழங்க ஆக்ரோஷத்துடன் நடனம் ஆடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது . தொடர்ந்து வீதி உலா நிறைவு பெற்று கோயில் முன் மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

















