விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

விழுப்புரத்தில் நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து 4 கிலோ தங்க நகைகளை 3 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர் – கொள்ளையடித்த நகையோடு ஏற்காடு தப்பிய கொள்ளையர்கள் ஏற்கனவே 3 முறை கொள்ளையடிக்க முயன்றதும் காவல்துறை விசாரனையில் தெரியவந்துள்ளது

விழுப்புரம் நகர பகுதியான கோட்டை வினாயகர் கோவில் முன்பாக விராட்டிக்குப்பம் பாதையை சார்ந்த நகை தொழில் செய்யும் கொல்லர் ராஜமாணிக்கம் என்பவரிடமிருந்து கடந்த 3 ஆம் தேதி 4 கிலோ 106 கிராம் நகை மற்றும் பணத்தை சென்னைக்கு பேக்கில் எடுத்து செல்லும் போது முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விழுப்புரம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தனிப்படைப்பொலிசார் விழுப்புரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, கோவை கும்பகோணம், உள்ளிட்ட இடங்களில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் 5 பேர் கொண்ட கும்பல் நகையை கொள்ளை அடித்து சென்றதும் அவர்கள் புதுச்சேரியை சார்ந்தவர்கள் என தெரியவந்தது . இதனையடுத்து புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சார்ந்த ஆனந்தன் (25), கந்தசாமி (எ) அரி(28), சுப்பிரமணி(25), சுரேந்தர்(24) ஆகிய 4 நான்கு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களிடமிருந்து நான்கு கிலோ தங்க நகையும் மூன்று லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினர் . மேலும் இந்த கொள்ளை வழக்கில் மூலக்காரணமாக திகழ்ந்த முக்கிய குற்றவாளி தலைமறைவாகி உள்ளதால் அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை அடிக்க பயன்படுத்தபட்ட இரண்டு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நகை கொள்ளை அடிப்பதற்கு மூல காரணமாக திகழந்த விழுப்புரத்தை சேர்ந்தவர் ஒரு நபர் ஏற்கனவே நகை வியாபாரி ராஜமாணித்திடம் பழக்கமானவர் என கூறப்படுகிறது. அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் இந்த புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஏற்கனவே மூன்று முறை இது போன்ற நகை எடுத்துச் செல்லும்போது கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி முயன்றும் அது தோல்வியில் சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் சி.சி.டி.வி கண்காணிபு கேமிராவில் சிக்காமல் இருக்க புதுவையில் இருந்து திருக்கனூர், மதுரபாக்கம், கப்பியாம்புலியூர் போன்ற கிராமபகுதிகள் வழியாக வந்து கப்ப கொள்ளையில் ஈடுபட்டதும், ஆனால் நகரப்பகுதில் தொடர்ந்து இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் சிக்கிகொண்டனர்.

விசாரணையை தொடங்கிய போலிசார் சிசிடிவி காட்சியை அடிப்படையில் இவர்கள் குற்றவாளிகள் யார் என்ன கண்டுபிடித்தனர். இவர்கள் ஏற்காடு கும்பகோணம் பகுதிகளுக்கு தனித்தனியாக சென்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்து அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்

Exit mobile version