திருவாரூர் அருகே மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பூண்டி நினைவு கையுந்து பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட கையுந்து பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான இளையோர் கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை விழுப்புரம் திருச்சி மதுரை திருநெல்வேலி ஈரோடு மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட 33 மாவட்டத்திலிருந்து ஆண்கள் அணியும் சேலம் ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகளும் பங்கேற்று வருகின்றனர்
முன்னதாக கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் கிராமத்தில் தமிழ்நாடு மாநில கையுந்து பந்து கழக தலைவரும் முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினறும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதமசிகாமணி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பங்கேற்று வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பந்து வீசி விளையாடினார்.
இன்று முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டி லீப் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் தேசிய அளவில் இந்த மாதம் நடைபெற உள்ள போட்டியில் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
FILE NAME TVR-13-02-2026-STATE-LEVEL- VOLLEYBALL-MATCH-NEWS.

















