விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததை தொடர்ந்து விழுப்புரம் நகரப் பகுதியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி.சண்முகம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே ஒன்று கூடிய அதிமுகவினர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்துக்கு மயிலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும், சி.வி. சண்முகம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
