திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வன உரிமைச் சட்டம் 2006-ன் நடைமுறைகளை விளக்கும் வகையில் கள ஆய்வு அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி இன்று (18.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம், 2006-ன் அடிப்படையில், பழங்குடியினருக்கு மரபு வழி வன வாழ்வினர்களுக்க தனி நபர் வன உரிமை (Individual Forest Rights) மற்றும் சமுதாய வன உரிமைகள் (Community Forest Rights) வழங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 1874 மனுக்கள் மாவட்டத்தில் வரப்பெற்றுள்ள நிலையில், அவை கிராம சபை → துணை மாவட்டத்தளக் குழு (SDLC) → மாவட்டத்தளக் குழு (DLC) என படிப்படியாக பரிசீலிக்கப்பட்டு, உரிமைகள் வழங்கும் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. வருவாய் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், அந்த ஆய்வைத் தொடங்குவதற்கான நடைமுறைப் பயிற்சியே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது. சென்னை பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர் திரு. ராஜன் அவர்கள் வன உரிமைச் சட்டம் 2006-ன் சட்டப்பிரிவுகள், நடைமுறை செயலாக்கம், கள ஆய்வின் முக்கியக் குறிப்புகள், பழங்குடியினரின் பாரம்பரிய நிலபயன்பாட்டு மரபுகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிக் கூறினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர். செ. சரவணன், அவர்கள் வரவேற்புரையாற்றி பயிற்சியை தொடங்கி வைத்து வன உரிமைகளை வழங்கும் செயல்முறை மிகத் துல்லியமாக நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகுரு அவர்கள் கள ஆய்வில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கி மனுக்கள் பரிசீலனையில் பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுரை கூறினார். இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள்: வனத்துறையின் ரேஞ்சர்கள், வனவர், வனகாப்பாளர்கள் வருவாய்த்துறையின் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்அவர்கள் அனைவரும் வன உரிமை வழங்குதல் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் குறித்து விளக்கங்களை கேட்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.
