அனுபவம் இல்லாதவங்களுக்கு.. அரசியல் எதற்கு.. விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு !

தமிழ்நாடு முழுவதிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் புதிய உத்தரவின் கீழ், ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதில் தடை விதிக்கப்படுகிறார்கள். கட்சி தலைவர் விஜய் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், செய்தி தொடர்பாளர்கள் மட்டுமே ஊடகங்களுடன் பேசலாம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

உத்தரவின் முக்கிய அம்சங்கள் :

மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் கட்சி சார்பில் ஊடகங்களில் பேசக் கூடாது.

எந்தவொரு அறிக்கையையும் லெட்டர் பேட் அல்லது அதிகாரபூர்வ வடிவில் வெளியிட கூடாது. சிறப்பு பேட்டிகள் அல்லது புகைப்படங்கள் மூலம் தகவல் பகிரவும் தடையிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் அனுபவம் குறைவு மற்றும் தவறான பேச்சுகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் இது செய்யப்பட்டது.

நிர்வாகிகள் தவறாக பேசி ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு கட்சி பொறுப்பேற்காது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்குகளில் கட்சி உதவாது என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர் சம்பவம் இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்ட ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணி காரணமாக, கட்சி நிர்வாகிகள் எந்தவொரு விவகாரத்திலும் கருத்து தெரிவிக்காமலும், பொய்யான வதந்திகளுக்கு இணங்காமலும் இருக்குமாறு தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், அரசியல் அனுபவம் இல்லாத நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். “அனுபவமில்லாதவர்களுக்கு அரசியல் வாய்ப்பு கொடுத்தால், அது கட்சிக்கு கூடுதல் சிக்கல்களை உருவாக்கும்” என கருத்து தெரிவிக்கப்படுகிறது.

    Exit mobile version