மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு திருவாரூரில் உற்சாக வரவேற்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 16, 17, 18 தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டருக்கான பூ பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்ற திருவாரூர் வ சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.இதைத் தொடர்ந்து பதக்கம் மற்றும் கோப்பையுடன் பள்ளிக்கு வருகை தந்த 10 மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.இந்த போட்டிகளில் 38 மாவட்டத்தை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் பாராட்டு தெரிவித்தார்..

Exit mobile version