மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ

சென்னை : மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது இன்ஜினில் தீ ஏற்பட்டது.

கோலாலம்பூரிலிருந்து வந்த சரக்கு விமானம், சென்னையில் தரையிறங்கும் தருணத்தில் இன்ஜின் பகுதியில் புகை வெளியேறியதை விமானி கவனித்தார். உடனடியாக அவர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி, விமான நிலைய தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கினார்.

தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செயல்பட்டு, தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தக்க நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. “விமானத்தில் லேசான புகை வெளியேறியது உண்மைதான். ஆனால் பெரிய அளவில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version