மயிலாடுதுறையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனத்தில் தீவிபத்து:- தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் தீ தீபத்து தவிர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை- கும்பகோணம் பிரதான சாலையில் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மகளிர் மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ள இடம் அருகில் காந்திஜி சாலையில் சரவணன் ஆயில் மில் என்ற கடையின் முன்பு முன்தோற்ற வேலைப்பாட்டுக்காக மறைப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் காற்றின் வேகத்தால், அருகில் இருந்த மின்கம்பியில் பட்டு உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதைக் கண்டு அப்பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவழி சாலையில் ஒரு வழிப்பாதையை தடை செய்து பள்ளி செல்லக்கூடிய மாணவர்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மின் உராய்வால் ஏற்பட்ட தீயினை அணைத்ததால் பெரும் தீ விபத்து விபத்து தவிர்க்கப்பட்டது.


















