தந்தையின் இதயம் வெளிவந்த நிலையில் ரத்த வெள்ளததில் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மேலப்பாதி கிராமத்தில் தந்தையை முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் கத்தியால் குத்திக் கொலை ; தந்தையின் இதயம் வெளிவந்த நிலையில் ரத்த வெள்ளததில் உயிரிழப்பு ;- மகனை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலப்பாதி வாய்க்காங்கரைத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(52). இவர் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோவில் எதிரே சாலையோரம் கரும்பு ஜுஸ் விற்பனை செய்து வந்தார். இவருக்கு ஜெயசெல்வி(50), ரேவதி (40) என்று இரண்டு (சகோதரிகள்) மனைவிகள் உள்ளனர். முதல்மனைவிக்கு சிவசர்மா(26), சபரி கிருஷ்ணன்(25), அபினேஷ் (24) என்ற மூன்று மகன்களும், சிவப்பிரியா(20) என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அபினேஷ் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மனைவிக்கு சிவவர்மா(14), தீபலெட்சுமி (12), கலியவரதன்(9) இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக நான்கு வருடமாக இரண்டாவது மனைவியுடன் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோவில் எதிரே வாய்க்கால் ஓரம் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். இந்நிலையில் முதல் மனைவியின் மூத்த மகன் பட்டா கேட்டு தந்தை சிவக்குமாரிடம் ஏற்கனவே பிரச்சினையில் ஈடுப்ட்டுள்ளார். இந்த நிலையில் இன்று மாலை சிவக்குமார் கரும்பு ஜுஸ் வியாபாரம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு அவரது முதல் மனைவியின் மகன் மதுபோதையில் இருந்த அபினேஷ்(25) தந்தையிடம் பட்டா கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபினேஷ் மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து தந்தை சிவக்குமாரை குத்தியதில் இதயம் மற்றும் குடல் வெளியே வந்தநிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெல்லத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஸ்பி பாலாஜி, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அபினேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தில் சொத்துபிரச்னையால் இந்த கொலை நடந்ததா, தந்தை செலவுக்கு பணம் கொடுக்காமல் தரகுறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version