பொய்யான வாக்குறுதிகள் : அரசு டாக்டர்களை ஏமாற்றியதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

“முதல்வர் ஸ்டாலின் நான்கு ஆண்டுகளாக அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வருகின்றார்” – முன்னாள் பா.ஜ. தலைவர் விமர்சனம்

சென்னை :
தமிழக அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனத் திருப்பூர் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை தொடங்கியுள்ள மருத்துவர் குழுவிற்கு ஆதரவு தெரிவித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலத்தில் உயிரை பணையாக வைத்து பணியாற்றிய மருத்துவர்கள், குறிப்பாக பணிக்காக உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கான நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.

அதேபோல், அரசாணை எண் 354ஐ நடைமுறைப்படுத்துவதற்கும், மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், போதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதற்கும் பல்வேறு நேரங்களில் அரசு டாக்டர்கள் அறப்போராட்டங்களில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் அரசுத் துறையில் பணியாற்றும் டாக்டர்களை சந்தித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது,” என்றார் அண்ணாமலை.

மேலும், “தங்களை தூண்டிவிட்ட அரசின் புறக்கணிப்பால் விரக்தியடைந்த மருத்துவர்கள், மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்வது, திமுக அரசின் தன்மையை வெளிப்படுத்துகிறது,” என கூறிய அவர், உடனடியாக அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version