குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் – போதையில் வாகனத்தில் மயங்கி கிடக்கும் காட்சிகள்…

கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே கொரியர் லாரி ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த சாலையில் ஓரத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி ஒன்று இருந்தது.அதனை குடிபோதையில் வந்த கொரியர் லாரி ஓட்டுநர் குழிக்குள் லாரியை இறக்கி விபத்துக்கு உள்ளானது.

போதையில் இருந்த ஓட்டுநர் செய்வதறியாது நிதானம் இழந்து அதே லாரியில் படுத்து கொண்டு உள்ளார். மேலும் அந்தச் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவரை எழுப்பியது போது லாரி சீட்டில் அப்படியே படுத்து கொண்டுள்ளார்.அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் எதிரே வராமல் இருந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இது குறித்த பொதுமக்கள் சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.மது போதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மயங்கி கிடக்கும் ஓட்டுநரின் வீடியோ காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version