பூவை முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் : மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு !

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலின் பூந்தமல்லி முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லாத ரயிலின் மூன்றாவது கட்ட சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப்பணிகள் தற்போது மும்முனை வழித்தடங்களில் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி – போரூர் இடையே உள்ள 9.5 கிலோமீட்டர் நிலத்தடி பாதையில் மெட்ரோ ரயில் 20 முதல் 25 கிமீ வேகத்தில் இயக்கி, மூன்றாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதுவே முதல் முறையாக DOWN LINE வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட ஓட்டமாகும். இதற்கு முந்தைய இரண்டு கட்டங்களில் மேல்நோக்கி (UP LINE) பாதையில் மட்டும் சோதனை நடைபெற்றது.

சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், ஐ.ஏ.எஸ்., “மூன்றாம் கட்ட சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதற்குப் பிந்தைய நாட்களில் படிப்படியாக மற்ற கட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

சென்னைவாசிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாதுகாப்பும், புதுமையும் கொண்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் விரைவில் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version