சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களைத் தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா சட்டமாகினால், பல பெரிய கேமிங் நிறுவனங்கள் நேரடி பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் பெட்டிங் மற்றும் ரியல் மணி கேம்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கும் நிலையில், Dream11 மற்றும் Mobile Premier League (MPL) போன்ற பிரபல நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளன.
Dream11-ன் தாய் நிறுவனம் Dream Sports மற்றும் MPL ஆகியவை தங்கள் தளங்களில் இனி நிஜ பணம் வைத்து விளையாடும் கேம்கள் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
குறிப்பாக MPL தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்ட பதிவின் மூலம், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
















