மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் DMK சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு DMK செயலாளர் நிவேதா முருகன் MLAதொடக்கிவைத்தார்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரத்தில் திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி; 50 அணியினர் பங்கேற்ற போட்டியினை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் ஆண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50 அணியினர் பங்கேற்ற இந்த போட்டி நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டது. போட்டியினை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ கலந்து கொண்டு விளையாடி, தொடக்கி வைத்தார். முதலிடம் பெறும் அணிக்கு ரூ.10,000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.7,000, மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5,000, நான்காம் இடம் பெறுபவர்களுக்கு ரூ 3000 ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியில் சிறப்பிடம் பெரும் வீரர்கள் மாவட்ட, மாநில அளவில் பங்கேற்று, மாநில போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியின் திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, ஒன்றிய செயலாளர் முருகமணி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அறிவுச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version