மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதை தொடர்ந்து விழுப்புரம் நகர திமுக அலுவலகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மாதந்தோறும் உரிமைத் தொகை மூலம் ரூ 1000 பெண்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர். இந்நிலையில் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பெற்று வந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரே நேரத்தில் 5000 ரூபாய் தங்களுடைய வங்கிக் கணக்கில் உரிமைத்தகைய வந்ததைக் கண்டு பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்களும், திமுகவினரும் விழுப்புரம் காந்தி சிலை முன்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 5000 ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் செலுத்திய முதல்வருக்கு என்றென்றும் உறுதுனையாக இருப்போம் என்று தெரிவித்தனர்* நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றி நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி நகர மன்ற உறுப்பினர்கள் வசந்தா அன்பரசு புருஷோத்தமன்
















