முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு DMK-வினர் கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கலைஞரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து திமுகவினர் கொண்டாட்டம்:-

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் திருவி மரியாதை செலுத்தினர். குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட மங்கநல்லூர் கடைவீதியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவரும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து வழுவூர் மெயின் ரோட்டில் உள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்தனர். இதேபோல் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தலைமையில் திமுகவினர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் திமுகவின் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட், சிவதாஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version