திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது . இதன் தொடர்ச்சியாக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன் திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பிடாரி கோவில் தெருவில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற வேட்பாளருமான பூண்டி கலைவாணன் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது திருவாரூர் திமுக நகர செயலாளர் பிரகாஷ், கொரடாச்சேரி திமுக பேரூர் செயலாளர் கலைவேந்தன் , திருவாரூர் நகர மன்ற உறுப்பினர்கள் செந்தில் ,அசோகன் ,உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

















