மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

மதுரை :
மதுரையில் நாளை (22.06.2025) நடைபெறவுள்ள முருகன் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. இந்து முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டை எதிர்த்து மதுரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குனர் அமீர் உட்பட அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பேசிய இயக்குனர் அமீர், “இங்கு கூடியுள்ள யாருமே முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் முருகன் பெயரை அரசியல் பாவனையில் பயன்படுத்துவோர்களுக்கு எதிராகவே இந்தக் கூட்டம் நடக்கிறது” என்றார்.

அமீரின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்திற்கு இடமளித்துள்ளன. இந்த நிலையில் இயக்குனரும், பாஜகவின் நிர்வாகியாகவும் உள்ள பேரரசு அமீரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“வேற்று மதத்தவராக இருப்பவர் இந்து மதத்தின் பிரச்சனைகளில் தலையிடுவது சரியானதல்ல. இந்து மதத்தின் மீது உங்களுக்கு பக்தி இருந்திருந்தால் பேசலாம். ஆனால் வேறு மதத்தைச் சேர்ந்த நீங்கள் இந்து மதத்தை விமர்சிக்க உரிமையில்லை” என பேரரசு கூறியுள்ளார்.

முருகன் மாநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பான விவாதங்கள் இன்னும் தீவிரமாகும் நிலையில் உள்ளன

Exit mobile version