எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திண்டுக்கல் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் ‘அறிவியல் சுருள்படப் போட்டி’ (Science Reels Competition) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியைப் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளையும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றன. மாவட்ட ஆட்சியர் செ. சரவணன்அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய எவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் தாங்கள் உருவாக்கும் சுருள்படங்களை (Reels) 60 நொடிகளுக்குள் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும். சுருள்படத்தின் உள்ளடக்கம் பின்வரும் தலைப்புகளில் இருக்கலாம்: ஓர் அறிவியல் தத்துவம், கருவிகளின் அறிவியல், செயல்முறை இயற்கையின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், சுற்றுச்சூழல் விண்வெளி மற்றும், ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI), வேளாண் அறிவியல், இந்த சுருள்படங்கள் மூலம் அறிவியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன், புதிய கண்டுபிடிப்பு எண்ணங்கள் சமூகத்தில் பரவ வாய்ப்பு உருவாகும் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இந்தப் போட்டி டிசம்பர் 8 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும். போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த குறுங்காணொளிகள், 2026 திண்டுக்கல் அறிவியல் திருவிழாவில் பரிசளிக்கப்படுவதுடன், காட்சிக்கும் வைக்கப்படும். இணையதளம்: https://dindigulsciencefest.com/reels அலைபேசி எண் (சைமன்): 7708928527 மின்னஞ்சல்: simonvis.com@gmail.com மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் அவர்கள், ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

















