அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

அய்யா வைகுண்டரின் 194 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே ஊர்வலமாக சென்ற பக்தர்கள் – குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது –
இத் தினத்தை முன்னிட்டு குமரி மாவடத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யாவைகுண்டர்.
இவர் அவதரித்த நாளான மாசி மாதம் 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவாக ‘அய்யாவழி’ சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அதன்படி அய்யா வைகுண்டரின் 194 ஆவது அவதார தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது,
இதனையொட்டி நேற்று இரவே நெல்லை, துாத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர்,
தொடர்ந்து அதிகாலை நாகர்கோவிலில் உள்ள நாகராஜாகோவில் திடலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமை பதி நோக்கி அய்யா அவதார தின விழா பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது,

பேரணியின் முன்பாக அய்யாவின் ‘அகிலதிரட்டு’ புத்தகத்தை, காவிக்கொடி பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து நடந்து சென்றனர்.

கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழியாக ஊர்வலம் சுவாமித்தோப்பு சென்றடைந்த இந்த பேரணியில் முத்துக்குடைகள், பலதரப்பட்ட மேளதாளங்கள் இடம்பெற்று இருந்தன,

வைகுண்டர் பிறந்த நாளில், சுவாமித்தோப்புக்கு நடந்து சென்று அய்யாவை வழிபட்டால் நினைப்பது நிறைவேறும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அய்யா வைகுண்டர் அவதார தின பேரணியை முன்னிட்டு நாகர்கோவில் முதல் சுவாமிதோப்பு வரையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் , இத் தினத்தை முன்னிட்டு குமரி மாவடத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.

Exit mobile version