இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தொடரில் பென் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல்

கன்னியாகுமரி மாவட்டம் இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தொடரில் பென் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பெண் காங்கிரஸ் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் மாநகராட்சி மூன்றாவது வார்டில் காங்கிரஸ் பெண் கவுன்சிலராக அருள் சபிதா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மூணாவது வார்டு பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் அன்று இரண்டு கோடியே 32 லட்சம் 11 ஆயிரம் ரூபாய் காண வேலை ஆணையர் மேயர் மற்றும் துணை மேயர் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வேலையானது ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட அளவுகளின் படி தரமாக இல்லாமல் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் அருள் சபீதா பொறியாளரிடம் ஒப்பந்ததாரர் நிர்ணயித்த அளவுகளின் படி வேலை செய்யப்பட்டுள்ளதா? அதன் தரத்தையும் பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கவனத்திற்கு 3-வது வார்டு கவுன்சிலர் கொண்டு சென்றுள்ளார் அதற்கு மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் பெண் காங்கிரஸ் கவுன்சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொலைபேசியில் ஒப்பந்ததாரர் மாமன்ற உறுப்பினர்கள் நான் வேலை செய்யும் இடங்களுக்கு பார்வையிடக்கூடாது, வேலை எனது விருப்பப்படி தான் செய்ய முடியும் நீங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வந்தால் உங்களை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். இது தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்பந்ததாரர் மீது புகார் அளித்துள்ளார் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று நடத்தப்பட்ட மாநகராட்சி கூட்டத்தொடரில் மூணாவது வார்டு காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மாநகராட்சி கூட்டத் தொடரில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தொடரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மாநகராட்சி கூட்டத் தொடரில் இருந்து வெளியேறப் போவதில்லை என காங்கிரஸ் பெண் கவுன்சிலர் திட்டவட்டமாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Exit mobile version