திருவள்ளூர் அருகே தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2 புதிய பேருந்துகளும் மற்றும் சொந்த கிராமத்திற்கு ஆம்பலன்ஸ் வாங்கி கொடுத்த தம்பதிகள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் – காஞ்சனா தம்பதிகள் இவர்கள் இருவரும் மப்பேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொன்போஸ்கோ செக்ராட் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அவர்கள் படிக்கும் போது பள்ளிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் நடந்து சென்று மிகவும் சிரமப்பட்டு படித்துள்ளனர், படித்து கடின உழைப்பின் மூலம் வாகன தொழிலில் முன்னேறியுள்ளனர். தன்னை போன்ற மற்ற ஏழைக் குழந்தைகளும் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படகூடது என்பதால் தான் படித்த பள்ளிக்கு ரூ.1.50 கோடி செலவில் இரண்டு பேருந்துகளும் மற்றும் தனது மப்பேடு ஊராட்சிக்கு இலவச ஆம்பலன்ஸ் வாகனத்தை வழங்கினர்கள், இத்தகைய பேருந்து மூலமாக கடம்பத்தூர் சுற்றுவட்டார கிராமங்களான மேட்டுக்கடை காந்தி பேட்டை, சமத்துவபுரம் விஸ்வநாதபுரம், அழிஞ்சிவாக்கம், மேட்டுச்சேரி, மப்பேடு, கீழச்சேரி , பண்ணூர் ஆகிய கிராமங்கள் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் பராமரிப்பு செலவும் ஓட்டுனருக்கான மாத சம்பளம் அவர்களை ஏற்றுக் கொண்டனர், தான் படித்த பள்ளிக்கும் தனது சொந்த கிராமத்திற்கும் இலவச பேருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தையும் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,













