July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பழமைமிக்க எண்கன்முருகன் கோவில் கும்பாபிஷேகம்,பக்தர்கள் – கை குழந்தைகளுடன் வயலில் இறங்கி செல்லும் அவலம்

by Satheesa
July 12, 2026
in News
A A
0
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பழம்பெருமைமிக்க எண்கன் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் – முறையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளாத கோவில் நிர்வாகத்தினரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க முடியாமல் திரும்பி சென்றனர் – காவல்துறையினரின் மெத்தன போக்கால் 3 மணி நேரமாக கடும் வெயிலில் போக்குவரத்து நெருசலில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் – கை குழந்தைகளுடன் வயலில் இறங்கி மொட்டை வெயிலில் நடந்து செல்லும் அவலம்..

பழம்பெருமை மிக்கதும், தொன்மை சிறப்பு வாய்ந்ததும், அறுபடை வீடுகளுக்கு இணையாக அருள் பாலிக்கும் எண்கன் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு நாட்களாக ஆறு கால பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆலய சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தக்கடங்களை சுமந்து சென்று, விமான கோபுர கலசத்தில் புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

இந்த கும்பாபிஷேகத்தை காண்பதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்செந்தூர், நாகர்கோவில், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

புகழ்பெற்ற எண்கன் முருகன் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத் திருவிழாவிற்கு திருக்கோவில் நிர்வாகத்தினர் முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக குடிப்பதற்கு குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்தனர். கழிவறை வசதியும் மிகக் குறைவாகவே இருந்ததால் பெரும்பாலான பக்தர்கள், முதியவர்கள் சொல்லொனா துன்பத்திற்கு ஆளாகினர்.

எல்லாவற்றிற்கும் மேலாக கும்பாபிஷேகத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என தெரிந்திருந்தும், முறையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், காவல் துறையினரும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவிலை சுற்றிலும் பொதுமக்கள் நின்று கும்பாபிஷேகத்தை காண்பதற்கு பதிலாக, கோவில் நிர்வாகத்தினர் பணம் வாங்கிக் கொண்டு சாலையோரம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட சிறு சிறு வியாபாரங்கள் நடைபெறுவதற்காக 20க்கும் மேற்பட்ட வாகன விற்பனையகங்ளுக்கு அனுமதி அளித்ததால் கோவிலை சுற்றி பொதுமக்கள் நிற்பதற்கு இடமில்லாமல் தவித்தனர்.

மேலும் கோவில் ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மட்டும் கோவிலின் அருகே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் நிற்பதற்கு வழியில்லாமல் தவித்தனர். இதனால் பெரும்பாலான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

கோவில் நிர்வாகம் தான் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற போதிலும் காவல்துறையினரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக 15 க்கும் குறைவான காவல்துறையினரே இந்த கும்பாபிஷேகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 30-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் மட்டுமே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக காலை 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற நிலையிலும், மதியம் ஒரு மணி வரை போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. கடும் வெயில் அடித்த நிலையிலும் அங்கே இருந்து நகர முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். ஒரு கட்டத்தில் கை குழந்தையுடன் வந்த பெற்றோர்கள் தங்கள் கைக்குழந்தையுடன் வயலில் இறங்கி நடந்து சென்றது வேதனையை ஏற்படுத்தியது.

மூன்று மணி நேரத்திற்கு மேலாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெருசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஒட்டுமொத்தமாக திருக்கோவில் நிர்வாகமும் திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் முறையான ஏற்பாடுகளை செய்யாததால் கும்பாபிஷேகத்தை காண வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தது மட்டுமல்லாமல், ஏன் கும்பாபிஷேகத்திற்கு வந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு காவல்துறை நடவடிக்கைகள் இருந்ததாக பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா

Next Post

முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

Related Posts

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி
News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
News

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது
News

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
News

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
Next Post
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

0
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

0
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

0
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Recent News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.