தனியார் பேருந்து – இருசக்கர வாகனம் மோதல்!தம்பதியர் படுகாயம்! அரசு மருத்துவமனையில் அனுமதி! போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதியர் இருவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அரூர் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்தை குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து அண்ணாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திருவண்ணாமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் பாஷா (33) மற்றும் அவரது மனைவி நஸ்ரின் (25) ஆகியோர் பயணித்த வாகனம் எதிர்பாராத விதமாக பேருந்துடன் மோதியது.
இந்த விபத்தில் ஜாகீர் பாஷா மற்றும் நஸ்ரின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
