சென்னை : திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரி, கூடுதல் தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி.) ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகியபோது, நீதிபதி வேல்முருகன் அவரை கடுமையாக கண்டித்தார்.
அதே வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் வந்து சில நிமிடங்களிலேயே, நீதிபதி உத்தரவுப்படி கோர்ட் வளாகத்திலேயே சீருடையில் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து சென்று பல மணி நேரம் விசாரித்தனர். விசாரணையின் போது, முக்கிய தகவல்கள் பதிவுசெய்யப்பட்டன.
இந்தக் கைது நடவடிக்கையையடுத்து, ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக டிஜிபி பரிந்துரை செய்தார். இதை உள்துறை செயலாளர் ஒப்புதல் அளித்து, அதிகாரபூர்வமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ள பூவை ஜெகன்மூர்த்தி திருவாலாங்காடு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார்.