சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று இரவு சோகம் நிறைந்த விபத்து.
போரூரிலிருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் தனது குடும்பத்துடன் பயணம் செய்த பத்மநாபன் என்பவர், அனகாபுத்தூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர், மதுபோதையில் எதிர் திசையில் தானியங்கி பாதையை மீறி காரை ஓட்டியதால், இரு கார்களும் நேருக்கு நேர் மோதியது.
இந்த பயங்கர மோதலில், காரில் பயணித்த பத்மநாபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 3 மாத கர்ப்பிணி பெண் தீபிகா (23) உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில், பத்மநாபனின் உறவினர் இந்திராணி (51) மற்றும் வாடகை கார் ஓட்டுநர் புவனேஷ் (21) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மணிகண்டனை கைது செய்து, அவரது காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.