திருவாரூரில் ஆவணங்கள் இன்றி லாரியில் எடுத்து வந்த ரூபாய் 1,77,550  மதிப்பிலான செல்போன் உதிரி பாகங்கள் பறிமுதல்

திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் எடுத்து வந்த ரூபாய் 1,77,550 மதிப்பிலான செல்போன் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் பறிமுதல்- தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அதிரடி..

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, நிலையான சோதனை குழு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 36 தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுக்கள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மதியம் திருவாரூர் மாவட்டம் கோமல் பகுதியில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்திபன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி மொபைல் போன்கள் மற்றும் டச் ஸ்கிரீன், செல்போன் கவர் உள்ளிட்ட மொபைல் போன் உதிரி பாகங்கள் என ஏறத்தாழ ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 550 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கைப்பற்றினர். இதனை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள், திருவாரூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளருமான ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்

Exit mobile version