சசிகலா ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக சிபிஐ தகவல் பதிவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரூ.450 கோடிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் சர்க்கரை ஆலையை ரொக்கமாக வாங்கியதாக சிபிஐ பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு 2016 நவம்பர் 8-ம் தேதி ₹500 மற்றும் ₹1000 நோட்டுகளை பின்வாங்கி கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்தது. அதே காலகட்டத்தில், சில வாரங்களுக்குள் சசிகலா அதே தொகையைக் கொடுத்து பத்மாதேவி சுகர்ஸ் சர்க்கரை ஆலையை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்க்கரை ஆலையின் இயக்குநர்கள் ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் படேல் மற்றும் பிறர் மீது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 120 கோடி ரூபாய் கடன் மோசடியாக பெறப்பட்டதாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐ சோதனைகள் 2017 நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் சசிகலா மற்றும் பிறர் சொத்துகளில் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, பத்மாதேவி சுகர்ஸ் ஆலையை ரொக்கமாக ரூ.450 கோடிக்கு வாங்கிய விவரம் உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில், பத்மாதேவி சுகர்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் ஷிவ்கன் படேல், தம்புராஜ் ராஜேந்திரன், பாண்டியராஜ் மற்றும் வெங்கட பெருமாள் ஆகியோருக்கு எதிராக மோசடி, கடன் மோசடி, சொத்து முறைகேடு, பணம் தவறாக பரிமாற்றம் செய்தல், வட்டியில்லாத கடனாக வழங்கல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சிபிஐ பதிவு செய்துள்ளது.

பண மதிப்பிழப்பு காலத்தில் சர்க்கரை ஆலையை முறைகேடாக வாங்கியதாக கூறப்படும் வழக்கு, அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version