திருவள்ளுர் அருகே 4 தலைமுறைகளைக் கண்ட முதியவரின் 101 வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்,
திருவள்ளூர் அடுத்த வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் – 101 வயதாகிறது. இவருக்கு கடந்த 1925 ம் ஆண்டு அன்னம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு முருகேசன் -(வயது 76) பொன்னுசாமி -(வயது 68) செல்வகுமார் -(வயது 65), திருமலை (வயது -52), சாமாத்தாள்-(வயது51) என 5 குழந்தைகள் பெற்றெடுத்தனர், இவர்களில் தற்போது 2 மகன்கள் 1 மகள் உயிருடன் உள்ளனர். முதியவர் மனைவி அன்னம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் குப்பன் தனது மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள், எள்ளுப்பேரன்கள், எள்ளுப் பேத்திகள் என 50-க்கும் அதிகமான உறவுகளுடன் 4 தலை முறைகளை கடந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் குப்பனின் 101 -வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவர்களது வாரிசுகள் முடிவு செய்தனர். இந்நிலையில் இவருக்கு மார்ச் 1 ந் தேதியான இன்று 101 வயது நிரம்பியதை அடுத்து, அவரது உறவினர்கள் அவரின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளனர் முதியவர் குப்பனுக்கு குடும்பத்தினர் பட்டு வேட்டி சட்டை உடுத்தி மலர் மாலை அணிவித்து ராஜ சிம்மாசனத்தில் அமர வைத்து பூர்வீக வீட்டில் கேக் வெட்டி அவரது 101 வது பிறந்தாளை உற்சாகமாக கொண்டாடி அவரிடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர். பின்னர் குப்பனிடம் இணைந்து பேரப்பிள்ளைகள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர், குப்பன் தாத்தா சிறு வயது முதலே எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது வரை அவரது வேலையை அவரே செய்து கொள்வதாகவும், யாருக்கும் எந்த தொந்தரவும் தந்ததில்லை என்றும், எங்கள் தாத்தாவை போல் நாங்களும் எந்த ஒரு பழக்கமும் இல்லாமல் அவரைப்போல் வாழ பழகிக் கொள்வோம் என கொள்ளு பேரன், பேத்திகள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்
