டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர தரையிறக்கம்

புதுடில்லி : தாய்லாந்தின் புகெட் நகரத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

156 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட AI 332 எனும் விமானம் இந்தியா நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில், விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக ஒரு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் பாதுகாப்பான இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் விமானத்தை முழுமையாக பரிசோதனை செய்தனர். பின்னர், இது வெறும் புரளி என்பது உறுதியாகியது.

மிரட்டல் கடிதம், விமானத்தின் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக தாய்லாந்து மற்றும் இந்தியா பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version