உளவுத்துறை காவலர் ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாஜக பிரமுகர் மதுபாலன் மீது பொய் குற்றச்சாட்டின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டம் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்ததோடு ஆதிவாசி பழங்குடியின மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை தொடர்ந்து மிரட்டி வரும் உளவுத்துறை காவலர் ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்திய பாஜக மாவட்ட தலைவர் உட்பட நூறுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

கடந்த ஆட்சியை போல் பரிவார் இயக்கங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு

விடியல் 2.0 ஆட்சி நடப்பதாகவும் விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான ஆறுகாணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாஜக பிரமுகர் மதுபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை முடக்க காரணமாக இருக்கும் உளவு பிரிவு காவலர் ஜெயசந்திரன் இது போன்று இந்த பகுதியில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து
ஜெயச்சந்திரன் தொடர்ந்து இந்த பகுதி மக்களை மிரட்டி வருவதாகவும் இவர் கிறித்தவ மதத்தை சார்ந்து இருப்பதால் பல இந்துக்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டுகளை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேல்புறம் வடக்கு ஒன்றியம் பாஜக தலைவர் ஹரீஷ் தலைமையில் ஆறுகாணி பகுதியில் பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆர்பாட்டம் அனுமதி மறுக்கபட்டதாக கூறி அங்கு வைக்கப்பட ஸ்பீக்கர்களை காவல்துறையினர் அகற்றினர். இதை தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட குவிந்த பாஜகவினரிடம் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் பாஜகவினர் ஆர்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அனுமதி மறுக்கபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சஜீ உட்பட 125 க்கும் மேற்பட்ட பாஜக வினரை போலீசார் கைது செய்தனர் அப்போது பாஜகவினர் வாகனத்தில் ஏற மறுத்து கோஷங்கள் எழுப்பிய வண்ணம் ஊர்வலமாக மண்டபத்திற்கு சென்றனர் பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ் கூறியதாவது

தொடர்ந்து ஆர் எஸ் எஸ்,பாரிவார்,இந்து இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருவதாகவும்

கடந்த ஆட்சியில் இது போன்று பொய் வழக்கு பதிவு செய்து வந்ததாகவும் இது போன்று இந்த ஆட்சியில் பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் கடந்த ஆட்சியை போல் போராட்ட அனுமதி மறுக்கப்பட்டது வருவதாக குற்றச்சாட்டு எழுப்பினார்

விடியல் ஆட்சி 2.0 நடந்து வருவதாகவும்

Exit mobile version