பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலக இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் அணிகளை உள்ளடக்கி, ஆசிய கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது.
தற்போது இதன் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி பதவி வகிக்கும் சூழலில், ஆசிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் தொடர்களில் இருந்து விலக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலை தொடர்ந்து, பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.