செங்கல்பட்டு அருகே 100 ஏக்கர் அப்பாவின் விவசாய நிலத்தை அபகரிக்க கிராம நிர்வாக அலுவலர் துணையுடன் முள்வேலி அமைப்பு. ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் எலுமிச்சம்பட்டு கிராமத்தில் காலம் காலமாக அங்குள்ள விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர்
சில வருடங்களுக்கு முன்பு சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் எலுமிச்சம்பட்டு கிராமத்தில் சுமார் 2 5 ஏக்கர் நிலங்களை வாங்கி உள்ளார்
அந்த நிலத்தில் சுரேஷ் என்பவர் அவருடைய நிலத்தில் முள் கம்பி வேலி அமைக்காமல் மற்றவர்களுடைய விவசாய நிலங்களை சுமார் 50 ஏக்கர் அப்பாவின் விவசாய நிலங்களை சேர்த்து முள் கம்பி அமைத்து அங்கே அந்த நிலத்தின் உரிமையாளர்களை செல்ல விடாமல் இரும்பு கேட்டு அமைத்து பூட்டு போட்டு அடைத்துள்ளார் .
இதனால் 50க்கும் மேற்பட்ட அப்பாவி விவசாயிகள் உள்ளே சென்று விவசாயம் செய்ய முடியாமல் மன வேதனையில் இருந்து வருகின்றனர் மேலும் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் சொந்த நிலத்திற்கு சென்றால் சுரேஷ் அவருடைய அடியாட்கள் தூண்டி விட்டு உள்ளே வரக்கூடாது மீறினால் கொலை செய்து விடுவோம் என்று சுரேஷ் அடியாட்கள் மிரட்டுவது
போன்ற செயல்களில் அராஜகம் செய்து வருகின்றனர் .
இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அவருடன் தாசில்தார்
ஆர் .ஐ உள்ளிட்டோர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை
ஆனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எலுமிச்சம்பட்டு கிராமத்தில் விவசாயிகளுடைய கோடிக்கணக்கான சொத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு சுரேஷ் என்பவர் இங்கே மொத்தமாக 100 ஏக்கர் நிலங்களை முள்வேலி அமைத்து நிலம் உரிமையாளர்களிடம் மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் இல்லையென்றால் யாரும் உள்ள செல்ல விடமாட்டேன் அதிகாரிகள் என் பக்கம் உள்ளார்கள் என்று தொடர்ந்து விவசாயிகளுக்கு சுரேஷ் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் கொடுத்து வருகின்றன . கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களுக்கு பணியாற்றுவார்கள் என்று பார்த்தால் மோசடி கும்பலுக்கு துணை போவார்கள் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக இதனை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் எலுமிச்சம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி என்பவரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும். அப்பாவி நிலங்களை அபாகரிக்க நினைக்கும் மேடவாக்கம் சுரேஷ் என்பவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஏரி கால்வாய் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கோவில் நிலங்களை அனைத்தையும் மீட்டு தரவும் மேலும் அங்கு சட்டவிரோதமாக அமைத்த முள்வேலிகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
உடனே தீர்வு கிடைக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
