செங்கல்பட்டு அருகே எலுமிச்சம்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் ஏரி கால்வாய்களை தனிநபருக்கு விற்க முயற்சி
தட்டி கேட்ட விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலூக்கா எலுமிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கால காலமாக விவசாயத்தை நம்பி விவசாயம் செய்து வாருகியின்றனர் சமீபத்தில் சென்னையிலிருந்து வந்து கோமதி W/o பாலசுப்ரமணி மற்றும் அந்த நிலங்களை பராமரித்து வரும் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்த்த சுரேஷ் என்பவர் சுமார் 35 ஏக்கர் நிலத்தை மொத்தமாக சிறு குறு விவசாயிகளிடமிருந்து கிரையம் பெற்ற நிலங்களை வைத்துக்கொண்டு சட்ட விரோதமாக அருகில் உள்ள பல சர்வே எண்கள் பல பட்டா நிலங்களும் சூழப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சர்வே எண்: 80/2A, 95/2, 95/3, 95/4 உள்ளிட்ட சுமார் 40 ஏக்கர் அப்பவ்வி ஏழை விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயம் செய்யவிடாமல் சட்ட விரோதமாக நீர் பிடிப்பு கால்வாயும் ஆக்கிரமிப்பு செய்து ஆனூர் ஏரியிலிருந்து தொடர்ச்சியாக வரும் பாசன கால்வாயானது இந்த குறிப்பிட்ட சர்வே எல்லைக்குள் சென்று முல்வேலியிட்டவர்களின் நிலத்திற்க்கும் அதன் தொடர்ச்சியாக அவர்களின் மற்ற நிலம் வழியாகவே சென்று மேலும் பல விவசாய நிலங்களுக்கும் ஏரி நீர் பாசனம் செல்லவிடாமல் ஏரி பாசன கால்வாய் முல்வேலி கம்பி போடப்பட்டு அங்கு சுற்றிலும் விவசாயிகள் யாரும் உள்ளே வராதபடி முல்கம்பிவேலி அமைத்து விவசாயப் வரப்பு பாதையை அடைத்துவிட்டனர். இதனால் அவர்களது நிலத்தை தாண்டி சென்று விவசாயம் செய்யும் விவசாயிகள் தாங்கள் விவசாய நிலங்களுக்குச் செல்லமுடியாமல் விவசாயிகள் மனஉடைச்சலக இருந்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் எலுமிச்சம்பட்டு கிரம நிர்வக அலுவலர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாசில்தார் RI மற்றும் சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் தனிநபர் கோமதி சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனிநபர் கோமதி சுரேஷ் இடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு
ஏறி கால்வாய்கள் மற்றும் கோவில் நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை பட்ட போட்டு தனிநபர் கோமதி சுரேஷ்க்கு விற்பனை முயற்சி செய்கிறர்களா கிரம மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சொத்துக்களை பராமரித்து வரும் சுரேஷ் என்பவர் அடியாட்களை வைத்துக்கொண்டு கிராம மக்கள் அந்தப் பகுதிகளுக்கு விவசாயி செய்ய செல்ல விடாமல் மிரட்டல் விடுவது மட்டுமில்லாமல் 50 ஏக்கர் பரப்பளவுக்கு முள் கம்பிகள் வேலி போட்டு தடுத்து பொதுமக்களை உள்ளே செல்லவிடாமல் பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் விவசாயிகள் மன உளைச்சலில் இருந்து வருகிறது இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
முக்கியமாக இதற்கு காரணம் எலுமிச்சம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனிநபரிடம் பணம் பெற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உதவி செய்யாமல் தனிநபருக்கு உதவுவது சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றன.

















