லீட்ஸ் : இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதுவரை ‘பட்டோடி டிராபி’ என அழைக்கப்பட்ட இந்த தொடருக்கு, இம்முறை முதல் முறையாக ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி’ என புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோப்பையை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணைந்து அறிமுகப்படுத்தினர்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரு அணியினரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்தியா துடுப்பெடுத்தாடுகிறது.
இந்த போட்டியின் சிறப்பு அம்சமாக, தமிழகத்தைச் சேர்ந்த பி. சாய் சுதர்சன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்பை புஜாரா வழங்கினார். புஜாரா அதே இடத்தில் – நம்பர் 3 – விளையாடி வந்ததை சாய் சுதர்சன் நிரப்புகிறார். இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் கவுண்டி லீக்கில் சிறந்த சாதனைகள் படைத்த சுதர்சன், தனது நல்ல ஃபார்மால் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போட்டி தொடக்கத்தில், 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 26 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்துள்ளார். கே.எல்.ராகுல் 18 பந்துகளில் 7 ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்திய அணியின் லைன்அப் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா