செங்கோட்டையன் பேச்சு அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ன செங்கோட்டை எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும் தேவைப்பட்டால் நான் பேசுகிறேன். திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் அனைவரும் வரவேண்டும் வருவார்கள் என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வ உ சி யின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ..பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் தந்துள்ளார். ஜிஎஸ்டி அறிவித்த காலகட்டத்தில் 5 ,12 ,18, 28 என இருந்த நிர்ணயங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.90% வரிகள் 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் பொது மக்களுக்கு மிகப்பெரிய லாபம் உள்ளது.வரி குறைப்பு காரணமாக பொருட்களை அதிகம் வாங்கும் திறன் கூடும்.மக்களின் வரிச் சுமை குறைந்துள்ளது ஜிஎஸ்டி என்பது மத்திய அரசு போட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜிஎஸ்டி என்பது கவுன்சில் கூடி முடிவெடுத்துள்ளது. அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இந்த கவுன்சில் கூட்டத்தில் முடிவுகளின் படி வரி அறிவிக்கப்பட்டது.சுதந்திர போராட்டத்தில் மக்களுக்கு போராடியவர்களும் உண்டு வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களும் உண்டு.இப்போது பேசுபவர் எல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவானது போல் தெரிகிறது.ஜிஎஸ்டி வரி என்பது மத்திய அரசு மட்டும் செய்தது கிடையாது.
அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஒன்று கூடி எடுத்த முடிவுதான் ஜிஎஸ்டி வரி.செங்கோட்டையன் பேச்சு என்பது அண்ணா திமுக உட்கட்சி விவகாரம்.யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை அவர்களது சொந்த குரலில் தான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒன்றாக அமைச்சர்களாக இருந்தவர்கள் அவர்களது கருத்தை அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும்.அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும்.
பள்ளி கல்லூரிகள் முன்பு போதை பொருள் விற்பனை பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது லாக்கப் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என பல பிரச்சினைகள் தமிழகத்தில் இருந்து வருகிறது.வெளிநாட்டுக்கு 5 முறை முதலமைச்சர் சென்று விட்டார். இப்போதும் சென்றுள்ளார் அங்கு அதிமமான ஒப்பந்தம் போட்டதாக சொல்கிறார். வெள்ளை அறிக்கை கேட்டதற்கு மாநிலத் தலைவர் பொய் சொல்கிறார் என தொழில்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் .நாட்டில் சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வு சிறு தொழிற்சாலைகள் மின்சார கட்டணம் உயர்வு.
இது போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது.இதிலிருந்து மாற்றம் வர வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நிரந்தரம் . தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ளது.கடைசி ஒரு மாதத்தில் கூட அதிகமான மாற்றங்கள் வரும்.ஆட்சி மாற்றம் வரும் நிச்சயமாக நல்லது நடக்கும்.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம்.அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் பேச வேண்டும் தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுகிறேன்.ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுக இணைய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறேன்.திமுகவை தவிர்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் அனைவரும் வரவேண்டும் வருவார்கள் என தெரிவித்தார்.
 
			















