ஆகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பயணித்த பயணிகள் குறித்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்துக்குள்ளானது போயிங் 787-8 வகை விமானம் என்பதுடன், அதில் மொத்தம் 242 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் :
169 பேர் இந்தியர்களும்,
43 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்களும்,
ஒருவர் கனடாவைச் சேர்ந்தவரும்,
7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
பயணிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக 1800 5691 444 என்ற உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.
“விபத்து தொடர்பாக நடைபெறும் அனைத்து விசாரணைகளுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.