சாலை விபத்து தொடர்பான வழக்கில் அண்மையில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்புடன் சில கருத்துகளை கூறி இருந்தது. கடந்த சில மாதங்கள் முன்பு பணமில்லா சிகிச்சை திட்டம் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இலவச சிகிச்சை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர் மட்டக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விபத்து நிகழ்ந்த நாள் முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறி உள்ளது.