திருத்துறைப்பூண்டி அருகே மினி லாரியில் மூலிகைச் செடி பறிக்க சென்ற ஆட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேல பாண்டி பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த நாசர் (45) என்பவருக்கு சொந்தமான மினி லாரியில் முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மூலிகைகளை பறிப்பதற்காக மேலப்பாண்டி பகுதியை சேர்ந்த வேணி 40, சுமதி 55, அஜித்தா 55 , அவரிக்காடு பகுதியை சேர்ந்த பரிமளா 40 மேலும் 3 ஆண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு பேர் சென்றபோது பின்னத்தூர் என்கிற பகுதியில் உள்ள சாலை வளைவில் வாகனம் டிரைவரின் கட்டுப்பட்டையிழந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்கால் ஓரம் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து எடையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
